ராமநாதசுவாமி கோவில்

ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பான்மையானோர் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தருகின்றனர். இதன் அருகிலேயே பல இடங்கள் காணத் தக்கவையாக இருக்கின்றன.


இது 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக அறியப் படுகிறது. ராமன் ராவணனைக் கொன்று அந்த பாவத்தை போக்க ராமேஸ்வரம் கோவிலில் வழி பட்டதாக கூறப்படுகிறது.


நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டு 865 அடி நீளமும், 657 அடி அகலமும் கொண்ட அழகிய பரப்பளவில் கோவில் அமைந்துள்ளது.


கிழக்கு மேற்காக பெரிய அளவில் இரு கோபுரங்களையும் கொண்டுள்ளது இந்த கோவில். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி மற்றும் 1200 தூண்கள் வெளி பிரகாரங்களில் மட்டுமே அமைந்துள்ளது.